சனி, 6 அக்டோபர், 2012

"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)


இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!! 

பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்? உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..? இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே?? என்பது..! 
இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது..!உண்மையில் இஸ்லாத்தில் அப்படி பட்ட கருத்து சொல்ல பட்டு இருக்கிறதா என்றால் இல்லை இல்லை என்ற ஆணித்தரமான பதிலை தான் நாம் தர வேண்டி இருக்கிறது ..

அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கொள்ளலாம்.
மேலும்..
எம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

 " ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)
"மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர" உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.அல்குர்ஆன் (58 : 11)
அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.அல்குர்ஆன் (2 : 269)

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)
மேற்காணும் குர்ஆன் வசனங்கள். மற்றும் ஹதீஸ்கள் கல்வியின் சிறப்பையும் அது இரு பாலாருக்கும் பொதுவானது என்பதையும் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி நிருபிக்கின்றன...!!! மேலும் பத்ரு போர்க்களத்திலே சிறைக்கைதியாகப் பிடிபட்ட ஒவ்வொரு கைதியும் விடுதலையாவதற்கான விலையாக மக்களில் பத்து பேருக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது வரலாற்றில் நாம் அறிந்த ஒன்றே! 

அக்காலத்திய இஸ்லாமிய பெண்கள் பற்றி சில :
சஹாபிய பெண்களின் அறிவு திறன் பிரமிக்க வைக்கிறது .அவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள் ..
ஒருமுறை ஒரு சஹாபிய பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்பது இஸ்லாம் பெண் கல்வியை தடுக்கிறது என்று கூப்பாடு போடும்... ஒரு சிலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.. ( எப்புடி தெரியும்? இந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உங்க கண்ணுல படாது.. அப்புடியே பட்டாலும்,.. கண்டும் காணாம.. இஸ்லாதுல வேற எதைபத்திடா குறை சொல்லலாம்னு மட்டும்தானே யோசிப்பீங்க?? )
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை 2210 ஹதீஸ்கள் ஆகும்.(((நாயகம் (ஸல்) அவர்கள் தன் மனைவி கல்வி அறிவில் சிறந்து இருப்பதை தடை செய்யவில்லை . இதுலேயே புரிஞ்சி இருக்கும் இஸ்லாமியர்களின் ஆணாதிக்கம்..(???????!!!!!!!) ))
அலீ (ரலி) அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.


பாக்தாத்தில்வாழ்ந்த ஷெய்கா சுஹதாஅவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான \, முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய   நானா அஸ்மா என்ற புரட்சிப்பெண்... !!
இவ்வாறு வாழ்வில் பல்வேறு துறைகளில் கற்று தேர்ச்சி பெற்று ஜெயித்து காட்டிய இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை வரையறுத்து இவ்வளவு தான் என்று அறிதியிட்டு கூற முடியாது.. கல்வியின் மூலமாக அவர்கள் சமூகத்திலும் அவர்களால் முடிந்த பல்வேறு பணிகளை மார்க்கத்தின் வரைமுறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்..

உலகில் வேறு எந்த மதமோ,அல்லது சமுதாயமோ வழங்கிராத சிறப்பும்,மதிப்பும்,மரியாதையும்,கண்ணியமும்,உரிமையும்,இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு ..இதில் கல்வி கற்பது மட்டும் எப்படி விதி விலக்காகும்..? இங்கு கல்வி கற்பதில் ஆண் என்றும் பெண் என்றும் எந்த பேதமும் இல்லை..! ஆணுக்கு கல்வி கற்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு சம உரிமை பெண்களுக்கும் உண்டு!. குர் ஆனில் எங்கும் பெண்கல்வியை மறுத்த்தற்கான வசனம் இருக்காது. அதே போல மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் எந்த இடத்திலும் பிரித்து காட்டப்பட வில்லை.மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே உலக வாழ்க்கைக்கு தேவையான கல்வி தான். இந்த சம உரிமை சட்டம் 7வது நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம்  ஒவ்வொருவருக்கும் கட்டாயக்கடமையாக்கிவிட்டது.
ஓதுவீராக! மேலும் உன் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்று கொடுத்தான்!'' (96;3-5)
இந்த வசனத்தில் ஓதுவீராக என சொன்னது ஆண் பெண் என இருவருக்கும் தான் .மார்க்கத்தில் பொதுவாக எது ஒன்றையும் குறிப்பிட்டு சொன்னால் அது இரு பாலாரையும் குறிக்கும்..ஆணுக்கு என்றும் அல்லது பெண்ணுக்கு என்றும் என தனித்தனியாக சொல்ல வேண்டும் என்றால் அது பிரத்தியேகமாக குறிப்பிட பட்டிருக்கும்.கல்வி கற்பதில்ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என எதுவும் கிடையாது..ஆனால் பெண் என்பதால் அவளின் பாதுகாப்பு கருதி மார்க்கம் அனுமதிக்க பட்ட விதத்தில் கல்வி கற்க வேண்டும். கோ-எஜுகேஷன்! இதை மட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்... இதை தவிர அவர்களுக்கு வேறு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட வில்லை.. !!

மார்க்கத்தில் சொல்ல பட்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள் என்பது..
அதன் படி நாம் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து தெளிவு பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் கட்டாயம் கல்வி அறிவு அவசியம்.இதில் எந்த வித பேதமும் இல்லை. நன்கு கல்வி கற்ற ஒருவரால் தான் சரி எது தவறு எது என்பதை நன்கு சீர் தூக்கி பார்க்க முடியும். ஆக பெண்கல்வியை மறுத்து அறிவை மழுங்க செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எப்படி நம் இபாதத்துகளை நிறைவேற்றுவது கட்டாய கடமையோ அதே போல கல்வி கற்று தன் அறிவை மேம்படுத்தி கொள்வது கட்டாய கடமை ஆகும்..!!
எந்த ஒரு சமூகமும் அதன் தனித் தன்மையோடு மேலே எழும் போது அங்கு ஆண் பெண் சார்ந்த பணிகள் ,கடமைகள் ,தேவைகள் அவசியமான ஒன்று ..இதற்கு அடிப்படையாக இருந்து அதை மேம்படுத்தி செம்மைபடுத்துவதற்க்கு கல்வி அறிவு அவசியம் ..இதில் எந்த ஆண் பெண்  விதிவிலக்கில்லை ..அதிலும் எந்த சமுதாயத்தில் பெண்கள் அறிவோடும் பண்பாடோடும் செயல்பாடோடும் இருகின்றார்களோ அந்த சமுதாயம் மிக நல்லதொரு சமுதாயமாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..!!தன் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்தோடு சரி தவறுகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு ஆண்களை விட பெண்களிடம் தான் உள்ளது...!  எனவே பெண்கல்வி அவசியம் என்பதை இஸ்லாத்தில் பல இடங்களில் உணர்த்தப்பட்டு உள்ளது..!

முஸ்லிம்களில் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களுமே கூட சரியான முறையில் மேற்கல்வியை தொடர்வதில்லை என்பதுதான்  நிதர்சனமான உண்மை..!!!
ஏன் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்க வில்லை என்றால் அவர்களின் அறியாமையையும் கல்வி பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததும் தான் காரணமே தவிர இதற்கு மார்க்கம் ஒருநாளும் காரணமாக இருக்க முடியாது.. !!!

மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் காரணத்தினால் கல்விபயிலும் வயதிலேயே கல்வியை தூர தூக்கியெறிந்து குடும்ப சுமையை ஏற்கவேண்டியிருந்தது. ஆண்களின் குறைவான கல்விதகுதியை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்ததன் விளைவே இன்றைய இஸ்லாமிய சமூகம் கல்வியில் பின் தங்கிய நிலைக்கு காரணமாக அமைகிறது. அது போக பழமையின் பிற்போக்குதனத்தில் ஊறிய முந்தைய தலைமுறைகள்  சமுதாயத்தோடு ஒன்றாய் கலந்துவிட்ட பெண்ணடிமைத்தனத்தை இஸ்லாத்திலும் இஸ்லாத்தின் பெயரை கொண்டு ஒடுக்க நினைத்தனர். அதன் விளைவாக பெண்கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ்குர் ஆனும்  படிப்பதும் அரிது, மார்க்க கல்வியை சரியாய் செயல்படுத்துபவர்களும் குறைவு. எனவே பெண்கல்வி மறுப்பு என்பது தட்டிகேட்கப்படாமலேயே  இருந்தது.  ஆனால் இன்று காலம் மாறிவிட்டது.  1986க்கு பிறகு  தமிழகத்தில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெண்களின் கல்வி விகிதமும்  கூடிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் தன் சமுதாயத்தை கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறனர் என்பதே நிதர்சன உண்மை....!!

மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் தனி தனியாக ஒன்று இல்லை என்பதையும் இதில் ஒன்று இருந்து ஒன்று இல்லையென்றால் நாம் இதன் பொருட்டு இழப்புக்குள்ளாவோம் என்பதையும் ஆண் பெண் இருவருமே தங்கள் கல்வி அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் உறுதியாக வலியுறுத்துகிறது. இதை உணர்ந்து அதை சொல் செயல் இரண்டிலும் நிலைநாட்டி நல்லதொரு சமுதாயம் உருவாக நாம் முயற்சிக்க வேண்டும் அதற்கு நமக்கு கருணை காட்டி நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக எல்லாம் வல்ல இறைவன் நாடுவானாக.. ஆமீன்..

டிஸ்கி : கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது... அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை...!!!!!

சனி, 29 செப்டம்பர், 2012

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம், அருளாளனிடம் சிறப்போம்


ஃபாத்திமா ஷஹானா கொழும்பு
இந்த உலகில் நபிமார்கள் என்று சொல்லப்படும் இறைவனின் தூதர்கள் செய்த இஸ்லாமியப் பிரச்சாரத்தை நாமும் தினமும் செய்ய வேண்டும்அந்த பிரச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துக் கொள்வது அல்லாஹ்வைப் பற்றிய பிரச்சாரமாகும்.

இன்றைக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் மாற்று மதஅன்பர்களானாலும் அல்லது இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு திரியும் முஸ்லீம் பெயர் தாங்கிகளாக
இருந்தாலும் இஸ்லாத்தை சரிவர புரியாததற்காண முக்கிய காரணம்;இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
அந்தக் கடவுள் கொள்கைளை அவர்கள் சரியாக அறிந்து கொண்டால் தமது வாழ்வில் வெற்றி பெருவது மிகவும் சுலபமாகிவிடும் என்பதை அறியாதுள்ளார்கள் என்பதே மிகவும் கவலைக்குறிய விஷயமாகும்.
இதன் காரணத்தினால் தான் இஸ்லாம் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை ஒரு முக்கிய விஷயமாக நமக்கு எடுத்து சொல்கிறது.
உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நீர் நேரான வழியில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 22:67)
உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்! (அல்குர்ஆன் 28:87)
அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும் அவனுக்கு இணை கற்பிக்கக்கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவன் பக்கமே உள்ளது என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 13:36)
இதுவே எனது பாதை நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவானவிளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம்.அல்லாஹ் தூயவன் நான் இணை கற்பிப்பவன் அல்லன் என்று (முஹம்மதே!)கூறுவிராக! (அல்குர்ஆன் 12:108)
அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இடக்கூடிய கட்டளைகளில் மிக முக்கியமான ஒன்றாக இதனை சொல்லிக் காட்டுகிறான்.அதாவது நபியவர்கள் செய்த முழுமையான பிரச்சாரத்தைப் பற்றி குறிப்பிடும் போது நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அதாவது இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதென்றாலே அது அல்;லாஹ்வைப் பற்றிய பிரச்சாரம் தான் என்பதை மிகத் தெளிவாக சொல்லும் படி மேற்கண்ட வசனத்தின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் உணர்துகிறான்.
 நபியவர்களை உலகுக்கு அனுப்பியதன் நோக்கம்
அல்லாஹ் இந்த உலகத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பியதன் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்.
நபியே!(முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும்,நற்செய்திகூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும்,அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும்,ஒளி வீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 33:45,46)
நபியவர்களை அல்லாஹ் ஐந்து விஷயங்களுக்காக இந்த உலகுக்கு அனுப்பியதாக சொல்கிறான்.
1. சாட்சியாளராக.
2. நற்செய்தி கூறக்கூடியவராக.
3. எச்சரிக்கை செய்யக் கூடியவராக.
4. அல்லாஹ்வின் விருப்பப் படி அவனை நோக்கி அழைப்பவராக.
5. ஒளி வீசும் விளக்காக.
இந்த ஐந்து விஷயங்களில் நான்காவதாக அல்லாஹ்வின் விருப்பப்படிஅவனை நோக்கி அழைக்கக் கூடியவராக நபியை அனுப்பியிருப்பதாக இறைவன் கூறுகிறான்.
அல்லாஹ்வின் இந்தக் கட்டளையில் இரண்டு விஷயங்கள்அடங்கியுள்ளன.அதாவது அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்க வேண்டும் என்பது முதலாவது.இரண்டாவது அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் போது நபியாக இருந்தாலும் தன்னிச்சையாக அல்லாஹ்வைப் பற்றி எதையும் கூறி அவன் பக்கம் அழைக்கக் கூடாதுஅவன் தன்னைப் பற்றி எதனை விரும்புகிறானோ,தன்னைப் பற்றி தனது தூதருக்கு எதனை கூறியுள்ளானோ அவைகளைக் கூறித்தான் அழைக்க வேண்டும்.
அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதால் என்ன நன்மை கிடைக்கும்?
இந்தக் கேள்விக்கு அல்லாஹ் மிகத் தெளிவாக பதில் தருகிறான்.
நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்!அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன் 3:110)
அனைத்து மக்களுக்கும் நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து,அல்லாஹ்வை நம்ப வேண்டும் இந்தக் காரணத்திற்காகத்தான் அல்லாஹ் நம்மை மிகச் சிறந்த சமூகமாக சிலாகித்துச் சொல்கிறான்.
அதே போல் மேற்கண்ட வசனத்திற்கு மேலதிக விளக்கமாக அதே அத்தியாயத்தில் இன்னோர் இடத்தில் மிக அழகாக அல்லாஹ் கூறுகிறான்.
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும்சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
அல்லாஹ் காட்டித் தந்த நல்வழியின் பக்கம் யார் அழைக்கிறார்களோஅவர்களே வெற்றி பெற்றவர்கள் அதுவல்லாததின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள் தோற்றுப் போனவர்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்.
அல்லாஹ்வை நோக்கி(மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லை கூறுபவன் யார்? (அல்குர்ஆன் 41:33)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைப்பவரை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை இறைவன் தெளிவாக சொல்வதுடன் இந்தப் பணி மிகத் தூய்மையான பணி என்பதையும் நமக்கு தெளிவு படுத்துகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.யாராவது நேர்வழியின் பக்கம் அழைக்கும் போது அதனை(நேர்வழியை) பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கக் கூடிய கூலியைப் போன்றே அவருக்கும் கிடைக்கும்.அதனைப்பின்பற்றுபவருக்கு அதனால் எந்தக் குறைவும் ஏற்படாது.(முஸ்லிம் :4831)
பிரச்சாரத்திற்கு பிரத்தியேகமான நேரமா?
இன்று நம்மில் அதிகமானவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மக்களைஅழைத்துப் பிரச்சாரம் செய்வதென்றால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு,ஒருகுறிப்பிட்ட நேரத்திற்கு மக்களை ஒன்று சேர்த்து பயான் ஒன்றை செய்தால் அதுதான் பிரச்சாரம் என்று நினைகிறார்கள்.
ஆனால் இஸ்லாமிய பிரச்சாரத்தைப் பொருத்தவரை அதற்கெண்று இடமோநேரமோ தேவையில்லை கிடைக்கும் நேரத்தை கிடைக்கும் இடத்தில் பயண்படுத்த வேண்டும். அப்படித்தான் நபிமார்களின் பிரச்சாரம் அமைந்திருந்தது.
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றிஅல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்டுகிறான்.
என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும் பகலிலும் நான் அழைத்தேன் என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 71:05)
மேற்கண்ட வசனத்திலிருந்து நபி நூஹ் அவர்களின் பிரச்சாரம் நேரத்தை குறி வைத்து செய்யப் செய்யப்பட்டதல்ல மாறாக கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் இரவு,பகல் என்று கூட பார்க்கவில்லை என்பதை நாம் அறிய முடிகிறது.
சிறையிலும் சீரான பிரச்சாரம்
பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுபவித்த நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூட இடத்தை குறி வைக்காமல் தான் சிறையில் இருந்தாலும் பிரச்சாரம்செய்வதற்கு அது தடை கல்லாக ஆகிவிடக் கூடாது என்பதால் அங்கும் தனது இறைவனின் பக்கம் அழைப்பதை தொடர்ந்தார்கள்.
என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள்(இருப்பது) சிறந்ததா?அல்லது அடக்கியாலும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்(இருப்பதுசிறந்ததா?)வா(அல்குர்ஆன் 12:39)
எப்படி பிரச்சாரம் செய்வது?
இன்றைய காலத்தில் எத்தனையோ பேர் பிரச்சாரத்தின் யுக்கிதெரியாமலும்,நபிமார்களின் பிரச்சார முறையைப் புரியாமலும் தாங்கள் நினைத்த விதத்தில் பிரச்சாரம் என்ற பெயரில் எதை எல்லாமோ செய்வதற்கு எத்தனிக்கிறார்கள்.
ஆனால் பிரச்சாரத்திற்கான அழகிய முறையை அல்லாஹ் மிக இலேசான முறையில் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்.
விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விளகியோரை அறிந்தவன் நேர்வழி பெற்றோறையும் அவன்அறிந்தவன்.(அல்குர்ஆன் 16:125)
அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய கட்டளைகளைப் பற்றியும் நாம்பிரச்சாரம் செய்கின்ற போது விவேகத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்.ஆனால் இன்று தங்களை பிரச்சாரகர்கள் என்று கூறிக் கொள்ளும் அதிகமானவர்களிடம் வேகம் மாத்திரம் தான் இருக்கிறதே தவிர விவேகம் இல்;லை.மார்க்க பிரச்சாரத்தில்விவேகம் இல்லாத வேகத்தால் எந்தப் பயனும் நிகழ்ந்துவிடாது.
ஆதலால் ஒவ்வொரு பிரச்சாரகரும் எந்தளவு பிரச்சாரத்தில் வேகம் காட்டுகிறோமோ அதைவிட அதிகமாக விவேகமும் நம்மிடம் இருக்க வேண்டும்.
அது போல் நம்முடைய பிரச்சாரம் அதைக் கேட்கின்ற மக்களுக்குஅழகான உபதேசமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கெட்ட வார்த்தைகள் பேசி,அசிங்கமான முறையில் நடந்தால் நமது பிரச்சாரத்தில் எந்தவொரு நன்மையும் நிகழாது.
கண்டிப்பாக நாம் பேசும் பேச்சுக்களில் மிகவும் கவணமாக இருக்க வெண்டும்.
குர்ஆனையும்,ஹதீஸையும் பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் இந்தஇரண்டுக்கும் எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பக் கூடியவர்களுடன் அழகிய முறையில் விவாதிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.அந்த அடிப்படையில் மிக அழகிய முறையில் பிரச்சாரம் செய்து தூய்மையான இஸ்லாத்தை உலகறியச் செய்யும் இந்தத் தூய பணியை தொடர்ந்தும் செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!